செல்பேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி

iphoneசெல்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாவிக்கப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறையை ஜேர்மன் நாட்டு புரோகிராமரான கார்ஸ்டன் நோல் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்த நோல் ”என்னிடம் ஏதாவது ஒரு செல்பேசி இலக்கத்தினை தந்து சில நிமிட அவகாசமும் தாருங்கள், நான் அந்த இலக்கத்திற்குரிய சிம் கார்ட்டினை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருததுடன் அதன் ஒரு நகலையும் உருவாக்கி காட்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை செல்பேசி சேவை வழங்குனர்கள் சிம்கார்ட் ஹேக் செய்யப்படுவதனை தடுக்க அவற்றிலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

0 comments