அண்மையில் கூகுள் குரோம் புக் என்ற தமது லேப்டாப் தயாரிப்பை வெளியிட்டுருந்தது கூகுள் நிறுவனம். இதற்கென அது உருவாக்கியுள்ள விளம்பரமே தற்போது சர்ச்சையை கிழப்பியுள்ளது.
பொதுவாக ஆப்பிள் நிறுவனம் தமது ஹாட்வேர் தயாரிப்பொன்றை
அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் டீசேர்ட் அணிந்த
படி திரையில் தோன்றி தயாரிப்பை பற்றி புகழ்ந்து பேசுவார்கள்.
இதைப்போன்றதொரு விளம்பரத்தை காப்பியடித்தே குரோம் புக்கின் புதிய விளம்பரத்தை உருவாக்கியுள்ளதென தற்போது சர்ச்சை நிலவுகின்றது.
அந்த இரு விளம்பரங்களின் வீடியோ இணைப்புக்களும் இங்கே……
செல்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம்கார்ட்களை ஹேக் செய்ய முடியும் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாவிக்கப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறையை ஜேர்மன் நாட்டு புரோகிராமரான கார்ஸ்டன் நோல் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்த நோல் ”என்னிடம் ஏதாவது ஒரு செல்பேசி இலக்கத்தினை தந்து சில நிமிட அவகாசமும் தாருங்கள், நான் அந்த இலக்கத்திற்குரிய சிம் கார்ட்டினை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருததுடன் அதன் ஒரு நகலையும் உருவாக்கி காட்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை செல்பேசி சேவை வழங்குனர்கள் சிம்கார்ட் ஹேக் செய்யப்படுவதனை தடுக்க அவற்றிலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தற்போது பாவிக்கப்பட்டுவரும் சிம் கார்ட்களின் தொழில்நுட்பம் பழமைவாய்ந்தவையாகக் காணப்படுவதுடன் அவற்றினை நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் பயன்படுத்தும்போது இலகுவாக ஹேக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வழிமுறையை ஜேர்மன் நாட்டு புரோகிராமரான கார்ஸ்டன் நோல் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இதுபற்றி தெரிவித்த நோல் ”என்னிடம் ஏதாவது ஒரு செல்பேசி இலக்கத்தினை தந்து சில நிமிட அவகாசமும் தாருங்கள், நான் அந்த இலக்கத்திற்குரிய சிம் கார்ட்டினை எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருததுடன் அதன் ஒரு நகலையும் உருவாக்கி காட்டுகின்றேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை செல்பேசி சேவை வழங்குனர்கள் சிம்கார்ட் ஹேக் செய்யப்படுவதனை தடுக்க அவற்றிலுள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
FILE
ஒரே செடியில் தக்காளியும், உருளைக் கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை படைத்துள்ளது.பிரிட்டனை சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம் கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.
நாட்டில் அலுமினியம் உற்பத்தியில் முன்னிலை
வகிக்கும் நால்கோ (சஅகஇஞ) நிறுவனம், 2012-13-ம் நிதியாண்டுக்கான
ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரூ.322.15 கோடி வழங்கவுள்ளது.
இது ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால ஈவுத்தொகையைச் சேர்த்து, 25 சதவிகிதமாகும். முந்தைய நிதியாண்டில் இந் நிறுவனம் வழங்கிய ஈவுத்தொகை 20 சதவிகிதம் என இந் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுசுமன் தாஸ் தெரிவித்துள்ளார்.
இந் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் புவனேசுவரத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
நால்கோ, நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனம். இந் நிறுவனம் துவங்கியதிலிருந்து மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.4,519.17 கோடி ஈவுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.33,000 கோடியில் விரிவாக்கம்: நால்கோ நிறுவனம், ரூ.33,000 கோடியில் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழிலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. இத் தொகை அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மின்னுற்பத்தியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம். உற்பத்தித் திறன், லாபத்தை அதிகரிக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம்.
மின்னுற்பத்தி, உலோகமல்லாத பிற தொழில்கள், இணைத்தல், கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளோம் என்றார்.
இது ஏற்கெனவே வழங்கப்பட்ட இடைக்கால ஈவுத்தொகையைச் சேர்த்து, 25 சதவிகிதமாகும். முந்தைய நிதியாண்டில் இந் நிறுவனம் வழங்கிய ஈவுத்தொகை 20 சதவிகிதம் என இந் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனுசுமன் தாஸ் தெரிவித்துள்ளார்.
இந் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் புவனேசுவரத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்குப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
நால்கோ, நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனம். இந் நிறுவனம் துவங்கியதிலிருந்து மத்திய அரசுக்கு மொத்தம் ரூ.4,519.17 கோடி ஈவுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
ரூ.33,000 கோடியில் விரிவாக்கம்: நால்கோ நிறுவனம், ரூ.33,000 கோடியில் விரிவாக்கம் மற்றும் மாற்றுத் தொழிலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. இத் தொகை அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும். அலுமினியம் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மின்னுற்பத்தியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம். உற்பத்தித் திறன், லாபத்தை அதிகரிக்க புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம்.
மின்னுற்பத்தி, உலோகமல்லாத பிற தொழில்கள், இணைத்தல், கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளோம் என்றார்.
ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை (செப்.28)
பவுனுக்கு ரூ.416 உயர்ந்துள்ளது. இதையடுத்து சென்னையில் ஒரு பவுன் தங்கம்
ரூ.22 ஆயிரத்து 616-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை மாலையில் ரூ.61.90 - ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு சனிக்கிழமை ரூ. 62.40-ஆக சரிவடைந்தது.
தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.935 உயர்ந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.49 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சனிக்கிழமை மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் தங்கம் ரூ.2,827
ஒரு பவுன் ரூ.22,616
ஒரு கிராம் வெள்ளி ரூ.52.90
ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,400
வெள்ளிக்கிழமை நிலவரம்:-
ஒரு கிராம் தங்கம் ரூ.2,775
ஒரு பவுன் ரூ.22,200
ஒரு கிராம் வெள்ளி ரூ.51.90
ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.48,465
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை மாலையில் ரூ.61.90 - ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு சனிக்கிழமை ரூ. 62.40-ஆக சரிவடைந்தது.
தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.935 உயர்ந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.49 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சனிக்கிழமை மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் தங்கம் ரூ.2,827
ஒரு பவுன் ரூ.22,616
ஒரு கிராம் வெள்ளி ரூ.52.90
ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,400
வெள்ளிக்கிழமை நிலவரம்:-
ஒரு கிராம் தங்கம் ரூ.2,775
ஒரு பவுன் ரூ.22,200
ஒரு கிராம் வெள்ளி ரூ.51.90
ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.48,465
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பலம்
வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதிக்குள்
முதல் அணியாக அடி எடுத்து வைத்தது.
ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், அரையிறுதி சாத்தியமானது.
இந்த ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரிஸ்பேன் நிர்ணயித்த 138 ரன்களை, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ள சென்னை அணி விரைவாக எட்டியது.
2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த சென்னை அணி 15.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சிறப்பான தொடக்கம்: சென்னை அணியின் தொடக்க வீரர்களிடம் பிரிஸ்பேன் வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை. குறைவான ரன்களை எடுத்திருந்த பிரிஸ்பேன் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது.
கடந்த ஆட்டங்களில் சொதப்பிய ஹசி-முரளி விஜய் ஜோடி, இந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது. இது சென்னையின் வெற்றியை எளிதாக்கியது.
ஹாட்ரிக் டக்கை தடுத்த விஜய்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் கடந்த 2 ஆட்டங்களிலும் டக் அவுட்டானார். எனினும், அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த தோனி, இந்த ஆட்டத்திலும் அவரையே தொடக்க வீரராக களமிறக்கினார்.
இதை உணர்ந்த முரளி விஜய், வழக்கம்போல் இல்லாமல் அதிரடியாக விளையாடினார். இதனால் அணியின் ரன் விகிதம் உயர்ந்தது.
27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது விஜய் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விஜய் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா, வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணியின் வெற்றி நெருங்கியது.
மேற்கொண்டு வீரர்கள் களமிறங்க அனுமதிக்காமல், ஹசி-ரெய்னா ஜோடியே அணியை வெற்றி பெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 சிக்ஸர்களை விளாசிய ரெய்னா 23 ரன்களில் வெளியேறினார்.
இதனால், உள்ளூர் நாயகன் தோனி களமிறங்கினார். இதனிடையே, பொறுமையாக ஆடி வந்த ஹசி 41 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.
சிக்ஸரில் வெற்றி: கட்டிங் வீசிய 15ஆவது ஓவரை எதிர்கொண்ட ஹசி பவுண்டரி மற்றும் 1 ரன் எடுக்க, தோனி பேட் செய்ய வந்தார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் தோனி பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். வெற்றிக்கு மேலும் 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. வழக்கம்போல், சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் தோனி.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஹசி 57 ரன்களும், தோனி 13 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது ஹசிக்கு அளிக்கப்பட்டது.
தடுமாற்றம்: முன்னதாக, முதலில் விளையாடிய பிரிஸ்பேன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் கட்டுக் கோப்பான பந்து வீச்சில் பிரிஸ்பேன் வீரர்கள் ரன் எடுக்கத் தடுமாறினர்.
தடுமாற்றத்தின் தொடர்ச்சியாக அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சரிவுக்குள்ளானது. ஹார்ட்லே, கட்டிங் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தில் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.
அதிகபட்சமாக பென் கட்டிங் 25 பந்துகளில் 5 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
சென்னை தரப்பில் ரவீந்திர ஜடேஜா, மொஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அரையிறுதி: 10 அணிகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை அணி, 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள
டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. இப்பிரிவில் இடம் பெற்றுள்ள ஹைதராபாத் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். அதேசமயம், 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய பிரிஸ்பேன், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
சுருக்கமான ஸ்கோர்
பிரிஸ்பேன் 137/7 (கட்டிங் 42*, ஹார்ட்லே 35, ஜடேஜா 2வி/18)
சென்னை 15.5 ஓவரில் 140/2 (ஹசி 57*, விஜய் 42, கிறிஸ்டியன் 1வி/16)
ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால், அரையிறுதி சாத்தியமானது.
இந்த ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், பிரிஸ்பேன் நிர்ணயித்த 138 ரன்களை, சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ள சென்னை அணி விரைவாக எட்டியது.
2 விக்கெட்டுகளை மட்டும் இழந்த சென்னை அணி 15.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சிறப்பான தொடக்கம்: சென்னை அணியின் தொடக்க வீரர்களிடம் பிரிஸ்பேன் வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில்லை. குறைவான ரன்களை எடுத்திருந்த பிரிஸ்பேன் அணிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது.
கடந்த ஆட்டங்களில் சொதப்பிய ஹசி-முரளி விஜய் ஜோடி, இந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியது. இது சென்னையின் வெற்றியை எளிதாக்கியது.
ஹாட்ரிக் டக்கை தடுத்த விஜய்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் கடந்த 2 ஆட்டங்களிலும் டக் அவுட்டானார். எனினும், அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த தோனி, இந்த ஆட்டத்திலும் அவரையே தொடக்க வீரராக களமிறக்கினார்.
இதை உணர்ந்த முரளி விஜய், வழக்கம்போல் இல்லாமல் அதிரடியாக விளையாடினார். இதனால் அணியின் ரன் விகிதம் உயர்ந்தது.
27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்தபோது விஜய் ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளை விஜய் விளாசினார்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா, வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை அணியின் வெற்றி நெருங்கியது.
மேற்கொண்டு வீரர்கள் களமிறங்க அனுமதிக்காமல், ஹசி-ரெய்னா ஜோடியே அணியை வெற்றி பெற வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 சிக்ஸர்களை விளாசிய ரெய்னா 23 ரன்களில் வெளியேறினார்.
இதனால், உள்ளூர் நாயகன் தோனி களமிறங்கினார். இதனிடையே, பொறுமையாக ஆடி வந்த ஹசி 41 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார்.
சிக்ஸரில் வெற்றி: கட்டிங் வீசிய 15ஆவது ஓவரை எதிர்கொண்ட ஹசி பவுண்டரி மற்றும் 1 ரன் எடுக்க, தோனி பேட் செய்ய வந்தார். அந்த ஓவரின் 4ஆவது பந்தில் தோனி பவுண்டரி அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கினார். வெற்றிக்கு மேலும் 4 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. வழக்கம்போல், சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் தோனி.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஹசி 57 ரன்களும், தோனி 13 ரன்களும் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது ஹசிக்கு அளிக்கப்பட்டது.
தடுமாற்றம்: முன்னதாக, முதலில் விளையாடிய பிரிஸ்பேன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் கட்டுக் கோப்பான பந்து வீச்சில் பிரிஸ்பேன் வீரர்கள் ரன் எடுக்கத் தடுமாறினர்.
தடுமாற்றத்தின் தொடர்ச்சியாக அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சரிவுக்குள்ளானது. ஹார்ட்லே, கட்டிங் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தில் அந்த அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.
அதிகபட்சமாக பென் கட்டிங் 25 பந்துகளில் 5 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.
சென்னை தரப்பில் ரவீந்திர ஜடேஜா, மொஹித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அரையிறுதி: 10 அணிகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிக்கு முதல் அணியாக சென்னை தகுதி பெற்றது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை அணி, 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள
டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. இப்பிரிவில் இடம் பெற்றுள்ள ஹைதராபாத் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். அதேசமயம், 3 ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய பிரிஸ்பேன், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
சுருக்கமான ஸ்கோர்
பிரிஸ்பேன் 137/7 (கட்டிங் 42*, ஹார்ட்லே 35, ஜடேஜா 2வி/18)
சென்னை 15.5 ஓவரில் 140/2 (ஹசி 57*, விஜய் 42, கிறிஸ்டியன் 1வி/16)
இந்த பகுதியில் மேலும்
இந்த பழத்தில் வைட்டமீன் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதன் நிறம் கண்களை கவரும் வகையிலும், சாப்பிடுவதற்கு விரும்பதக்கதாகவும் இருக்கின்றது.
திராட்சை பழத்தில் இருந்து மருந்து, ஒயின், கிரேப் சீட் எண்ணெய், சாக்லேட், ஜூஸ் என பலவற்றை தயாரிக்கலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமீன் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
இப்பழத்தை உண்பதால்.....
* உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறும்.
* பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
* திராட்சைப் பழத்துடன் மிளகை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, நாக்கு வறட்டுதல் நீங்கும்.
* உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கு திராட்சைப் பழம் ஏற்றது.
* திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர மாதவிடை கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாகும்.
* கண்பார்வையை அதிகரிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், சிறுநீரக பிரச்னையை அகற்றவும் இது பயன்படுகிறது.
* இளம் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்னைக்கு, இதன் சாறு எடுத்து தடவினால் விரைவில் பரு கொட்டிவிடும். முகத்தில் ஏற்படும் கருவளையத்தை போக்கவும், தோல் வியாதியை கட்டுப்படுத்தவும் திரட்சை பயன்படுகிறது.
திரட்சைப்பழம் உடல் நலத்திற்கு மிக மிக நல்லது. ஆகவே தினமும் இதை உண்டு வந்தால் இளமையாகவும், அழகாகவும் இருக்கலாம்
Popular Posts
-
actress anushka
-
செல்பேசி பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி
-
Rajinikanth photo gallery
-
அரசுக்கு ரூ.322 கோடி ஈவுத்தொகை: நால்கோ வழங்குகிறது
-
விருப்பம் - virubbam
-
Tea Cash Onlinejob
-
பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சை
-
ஒரே செடியில் தக்காளி, உருளை: 'டொம்டாட்டொ' புதிய சாதனை
-
சூப்பர் கிங்ஸ் "ஹாட்ரிக்' வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது
-
பணம் சம்பாதிக்க ஆன்லைன் வேலை